செவ்வாய், 31 மார்ச், 2015

என் சடலம் (கவிதை)


நிச்சயமாகத் தெரியும்
அது
என் சடலம் தான்
கண்ணாடியில்
தினமும்
பார்ப்பதுதானே
அடையாளம்
தெரியாமல்
போய்விடுமா என்ன?
இப்போதெல்லாம்
அடிக்கடி
தென்படுகிறது
என் சடலம்
இல்லை, அது எப்போதும்
இருக்கிறது
நான்தான்
இதுவரை
கண்டுகொள்ளவில்லையோ
என் சடலத்தை?
நம் சடலத்தை
நாம் கண்டு
அழாமல்
நாயா அழும்?
வாழும் போது
என் சடலம்
எனக்கே தெரியாமல் போனால்
செத்த பின்பு
என் சடலம்
தன் சடலமென்று
தெரியாமல் போகாதா
இன்னொருவனுக்கு?
-சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக